Published : 13 Mar 2015 01:11 PM
Last Updated : 13 Mar 2015 01:11 PM
சிண்டிகேட் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ரவிசங்கர் பாண்டே இம்மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் யூனியன் வங்கியின் பொது மேலாளராக பதவி வகித்தார்.
பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம், எல்எல்பி முடித்துள்ள பாண்டே 1980-ம் ஆண்டில் யூனியன் வங்கியில் ஆடிட் அதிகாரியாக வங்கிப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்து வங்கியின் பொது மேலாளராக உயர்ந்தார். யூனியன் வங்கியின் ஹாங்காங் கிளையில் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். 34 ஆண்டுகளாக வங்கிப் பணிகளில் இவர் அனுபவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT