Published : 13 Mar 2015 03:39 PM
Last Updated : 13 Mar 2015 03:39 PM

ராஜபக்ச தோல்விக்கு மோடியின் நடவடிக்கையே காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்

ராஜபக்ச தோல்விக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை உள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "மோடியின் பயணம் தமிழக மீனவர், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும்.

இலங்கையில் ராஜபக்ச தோல்விக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை உள்ளது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான புகார் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை. மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும்'' என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x