Published : 10 Mar 2015 07:10 PM
Last Updated : 10 Mar 2015 07:10 PM

மணல் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

திருச்சி மண்டலத்தில் கடந்த 8-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்ட மணல் லாரி உரிமை யாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ‘இன்று (11-ம் தேதி) காலை முதல் மணல் லாரிகள் வழக்கம் போல் இயங்கும்’ என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசா மணி தெரிவித்தார்.

அரசு மணல் குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் ரூ.1,000க்கும், மூன்று யூனிட் ரூ.1,500-க்கும் வங்கி வரைவோலை பெற்றுக்கொண்டு மணல் வழங்க வேண்டும். மணல் இரண்டாம் விற்பனை மையங்களை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கையை வலியுறுத்தி திருச்சி மண்டல அளவில் கடந்த பிப். 8-ம் தேதி முதல் தமிழ்நாடு மணல் லாரி உரிமை யாளர்கள் சம்மேளனத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் நேற்று போராட்டம் தொடர்பாக இரண்டாம் மணல் விற்பனை மைய ஒப்பந்ததாரர்களுடன், லாரி உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், சுமூக தீர்வு காணப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு பின்னர் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம் மளேனத் தலைவர் செல்ல.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரண்டாம் மணல் விற்பனை மையங்களில் சிறிய லாரிகளுக்கு இரண்டு யூனிட், பெரிய லாரிகளுக்கு மூன்று யூனிட் மணல் மட்டும் ஏற்றப்படும். ஓட்டுநர்கள் கேட்கும் ஊருக்கு மணல் எடுத்துச் செல்ல உரிமம் வழங்கப்படும். இரண்டாம் மணல் விற்பனை மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் செயல்படும் என, மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்தனர். மற்ற கோரிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதனால், போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளோம். புதன்கிழமை (11-ம் தேதி) காலை முதல் மணல் லாரிகள் வழக்கம்போல் இயங்கும் இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x