Published : 25 Mar 2015 01:29 PM
Last Updated : 25 Mar 2015 01:29 PM

இடதுசாரி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சிறப்பு கவனம்: தமிழக அரசு

இடதுசாரி தீவிரவாதம் ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகள் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என சட்டப்பேரவையில் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் கூறினார்.

பட்ஜெட் உரையை வாசித்த முதல்வர், "தனிக்கவனம் செலுத்தப்படும். 2015-2016 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சிமலை மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே, இடதுசாரி தீவிரவாதம் ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகள் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் அளிக்கும் வகையில், 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் இந்த அரசால் தொடங்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x