Published : 10 Mar 2015 10:02 PM
Last Updated : 10 Mar 2015 10:02 PM
சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்கா விட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜே.அன்பழகன் தந்தை கி.ஜெயராமன் நினைவுநாள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஸ்டாலின் பேசினார்.
''சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்கா விட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்துவோம் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களைச் சார்ந்த திமுக தொண்டர்களுடன் போராட்டம் நடத்துவோம். அனுமதி தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தை திமுக நடத்தும்.
ஜெயலலிதா விடுதலையான பிறகு ரயில் சேவையை தொடங்கலாம் என்று அதிமுக ஆட்சி திட்டமிடுகிறதா?'' என்று ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT