Published : 03 Mar 2015 09:59 AM
Last Updated : 03 Mar 2015 09:59 AM

வணிகவரித் துறை ஊழியர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ்: அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வணிகவரி பணி யாளர்கள், அலுவலர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப் பட்டது.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேவையற்ற வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மார்ச் 2-ம் தேதி முதல் கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பின்னர் அங்கு பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் லட்சுமணன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக ராஜேந்திரன் கூறுகையில், “அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதனால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். அதற்கு பதிலாக பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x