Published : 30 Mar 2015 09:59 AM
Last Updated : 30 Mar 2015 09:59 AM
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என்பது முன்கூட்டியே தெரியும் என்று சொல்பவர்கள் கட்சியை சீர்படுத்தாதது ஏனென்று கேள்வியெழுப்பி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதிய மைச்சர் ப.சிதம்பரம், “மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடை யும் என்பது முன்கூட்டியே எனக்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு தலைவராக அஸ்லம் பாஷா பொறுப்பேற்கும் விழா வில் பங்கேற்ற தமிழக காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “தற்போதைய பாஜக அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்கும் எதிரானதாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் அரசு விவசாயிகள், சிறுபான்மையினர் என எல்லா தரப்பு மக்களின் பாதுகாவலனாகவே இருந்தது. மோடியின் அரசை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற் கும் என்பது தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று நம்மில் ஒரு தலைவர் கூறியுள்ளார். இதனை முன் கூட்டியே அறிந்த அவர் கட்சியை சீர்படுத்த முயற்சி எடுக்காதது ஏன்? இப்படி கட்சியை விமர்சித்து பேசுபவர்களே நாளை அமைச்சர்களாகவும் ஆகி விடுகிறார்கள்” என்று கூறினார்.
முன்னதாக நிருபர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “காவிரி பிரச்சினை போன்ற மாநில பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை ஒற்றை நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT