Published : 17 Mar 2015 09:44 AM
Last Updated : 17 Mar 2015 09:44 AM

ஸ்டான்லியில் பசுமை வளாகத் திட்டம்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் “பசுமை வளாகம் திட்டம்” தொடக்க விழா நேற்று நடந்தது. மருத்துவமனை ஆர்எம்ஓ டாக்டர் எம்.ரமேஷ் விழாவுக்கு தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி டாக்டர் நா.மாண்ணிக்கவேல், உதவி ஆர்எம்ஓ-கள் டாக்டர் சுபாஷிணி, டாக்டர் லஷ்மணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை டீன் டாக்டர் பொ.கார்குழலி பசுமை வளாகத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x