Published : 08 Apr 2014 10:01 AM
Last Updated : 08 Apr 2014 10:01 AM

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தள்ளிவைப்பு

ஏப்ரல் 28-ம் தேதி நடக்கவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு அரசு சார்பில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் முதல் வாரத்தில் தொடங்கிய பயிற்சி வகுப்புகள் வரும் 15-ம் தேதி முடிகின்றன.

இதற்கிடையே, ஏப்ரல் 28-ம் தேதி நடத்தவிருந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே இறுதியில் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x