Published : 13 Mar 2015 12:09 PM
Last Updated : 13 Mar 2015 12:09 PM
சிறுநீரக நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சாபியன் நல்வாழ்வு நிறுவனம் உலக சிறுநீரக நாள் 2015-ஐ ஒட்டி தமிழகம் முழுவதும் சிறுநீரக செயலிழப்பு குறித்த பல்வேறு கட்ட விழிப்புணர்வு முகாம்களை இம்மாதம் 11-ம் தேதி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சாபியன் நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குடிசைப் பகுதிகள், வீட்டு வசதி குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் ஒரு மணி நேர தெரு நாடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. நலம்தானா என்ற தன்னார்வ தொண்டு அமைப் பைச் சேர்ந்த ஜீவா இந்த நாடகத்தை இயக்கியுள் ளார்.
ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொள்வது, உணவில் உப்பை குறைப்பது, அதிக தண்ணீர் குடிப்பது, புகைபிடிக்காமல் இருப்பது, சரிவிகித உணவை உட்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலம் சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும் என்று அந்த நாடகத்தில் போதிக்கப்படுகின்றன.
சென்னை, கோட்டூர்புரம், சித்ரா நகரில் உள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே இன்று மாலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு நாடகம் நடைபெறுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT