Published : 18 Mar 2015 09:51 AM
Last Updated : 18 Mar 2015 09:51 AM
இலங்கையில் ஜனவரி இரண்டாம் வாரம் புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்றதும் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என அறிவித்தார்.
படகுகளை மீட்டுவர ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகை ஆகிய இடங்களில் இருந்து 20 படகுகளில் 130 மீனவர்கள் மற்றும் தமிழக மீன்வளத் துறையினர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக் கிழமை இலங்கை சென்றனர்.
இதில் நாகையைச் சேர்ந்த 9 படகுகள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 20 படகுகள், ராமேசு வரத்தைச் சேர்ந்த 3 படகுகள், மண்டபத்தைச் சேர்ந்த 2 படகுகள் என 34 படகுகளுடன் மீனவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு இரவு தாயகம் வந்தடைந்தனர்.
மீதமுள்ள படகுகளை ஒப்படைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT