Last Updated : 23 Mar, 2015 06:32 PM

 

Published : 23 Mar 2015 06:32 PM
Last Updated : 23 Mar 2015 06:32 PM

ஓபன் புக் பள்ளித் தேர்வு முறையை தீர்வாக சொல்லும் லாலு

பிஹார் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடித்த விவகாரம் நாடு முழுதும் கடும் கண்டனக்குரல்களை எழுப்பியுள்ள நிலையில், பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் 'ஓபன் புக்' முறைக்கு லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

"என்னுடைய அரசாக இருந்தால், புத்தகத்தை வைத்துக் கொண்டே விடை எழுத அனுமதித்திருப்போம். புத்தகத்தை படித்த மாணவர்களுக்கே அப்போது சரியான விடையைக் கண்டுபிடிக்க இயலும். படிக்காத மாணவர்கள் தேர்வின் நேரம் முடிந்த பிறகும் கூட விடைகளைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

பெற்றோர்கள் தேர்வு நடைபெறும் அறைகளுக்குள் நுழைகின்றனர், காவல்துறையினர் தூங்கிக் கொண்டிருந்தனர்" என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியும் லாலுபிரசாத்தின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் புத்தகத்தை வைத்துக் கொண்டே விடை எழுதும் முறை தேர்வுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு தர்க்கம் உள்ளது. காரணம் புத்தகத்தை முழுதும் படித்த மாணவர்களே சரியான விடையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

ஆனாலும் திறந்த புத்தக முறை என்பது முற்றிலும் வேறு ஒரு விவகாரம். இப்போது நடந்த பெரும் ஏமாற்று வேலையை இதனுடன் இணைத்து நோக்குதல் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x