Published : 01 Feb 2015 12:04 PM
Last Updated : 01 Feb 2015 12:04 PM
நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் கே.டி.எஸ்.துள்சி, வரபிரசாத் ராவ் உள்ளிட்ட 7 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவினரும் பல்வேறு துறைகளின் இயக்குநர்களும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு பணிகளை கடந்த சில நாட்களாக ஆய்வு செய்துவருகின்றனர்.
இக்குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன், உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் விஜயன், சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலாளர் சுதா, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 17 மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப் பிறகு நிருபர்களிடம் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தேசிய லோக் அதாலத்தில் 15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. சாமானிய மக்களுக்கு சட்ட உதவி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மும்பை, சென்னை உட்பட நான்கு உயர் நீதி மன்றங்களின் பெயர்கள் மாற்றம் தொடர்பான பரிசீல னை நடந்து வருகிறது. விரை வில் அதுகுறித்து முடிவெடுக் கப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற் றுவது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமனம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆணையம் அமைத்த பிறகே அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT