Published : 11 Feb 2015 05:08 PM
Last Updated : 11 Feb 2015 05:08 PM
ஸ்ரீரங்கத்தில் திமுக அதிமுகவினரிடையே மோதல் உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. திமுக சார்பில் ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ஸ்டாலினை வரவேற்க திமுக தொண்டர்கள் திரண்டனர். ராஜகோபுரத்தை அதிமுகவினர் கடந்து செல்லும்போது திமுகவினருடன் மோதல் ஏற்பட்டது. கைகலப்பு நடைபெறுவதற்கு முன் போலீஸ் தலையிட்டு அதிமுகவினரை வேறு பாதையில் அனுப்பியது.
இதற்கு முன்னதாக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 150 பிரியாணி பொட்டலங்கள் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT