Published : 26 Feb 2015 09:19 AM
Last Updated : 26 Feb 2015 09:19 AM
இந்திய கடலோரக் காவல் படையின் `வைபவ்’ என்ற ரோந்து கப்பலில், கடலோரக் காவல் படையினர் நேற்று முன்தினம் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். இந்திய கடல் எல்லைக் குள் இலங்கையை சேர்ந்த 4 மீன் பிடிப்படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அவற்றில் இருந்த இலங்கை மீனவர்கள் 19 பேரை கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடு விக்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் தூத்துக்குடி துறைமுகத் துக்கு அழைத்து வரப்பட்ட இலங்கை மீனவர்களை, இந்திய கடலோரக் காவல் படையினர் மீண் டும் சர்வதேச கடல் எல்லைக்கு அழைத்துச் சென்று விடுவித்தனர்.
இதற்கிடையே கடந்த காலங் களில் பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடி பழைய துறை முகத் தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள இலங்கை மீனவர்களின் 5 படகு களை விடுவிக்க அரசு உத்தரவிட் டுள்ளது. அந்த படகுகள் ஓரிரு நாளில் இலங்கைக்கு எடுத்து செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT