Published : 10 Feb 2015 10:00 AM
Last Updated : 10 Feb 2015 10:00 AM

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: திரையரங்க நிர்வாகிகள் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திரையரங்க நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் பிரபல கிளப் ஒன்று உள்ளது. கடந்த 1-ம் தேதி இந்த கிளப்புக்கு காட்டாங்கொளத்தூர் தனியார் கல்லூரியில் படிக்கும் புல்ஷத்மேத்தா(20) என்ற மாணவரும், அதே கல்லூரியில் படிக்கும் அவரது பெண் தோழியும் வந்திருந்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பிச் செல்வதற்காக கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றபோது, அவர்கள் பின்னால் வந்த 2 பேர் அந்த மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதை தடுத்த புல்ஷத்மேத்தாவை தாக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

பின்னர் பாலியல் தொந்தரவு செய்த இருவரும் ஒரு காரில் ஏறிச் சென்றனர். அந்த காரின் எண்ணை குறித்து வைத்துக்கொண்ட புல்ஷத்மேத்தாவும், மாணவியும் நடந்த சம்பவங்கள் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரைப் பதிவுசெய்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காரின் நம்பரை வைத்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்தார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தது வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கின் மேலாளர் உமாபதி (26), அதே திரையரங் கில் உதவியாளராக இருக்கும் மணிகண்டன் (24) என்பது தெரிந் தது. இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

உமாபதி, மணிகண்டன் இருவரையும் நேற்று முன்தினம் மாம்பலம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x