Published : 17 Feb 2015 10:06 AM
Last Updated : 17 Feb 2015 10:06 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நியூஸிலாந்து அஞ்சல்துறை சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது. சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறையும் சென்னையில் நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன. இதனை கொண் டாடும் வகையில் நியூஸிலாந்து அஞ்சல் துறை உலகக் கோப்பை சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது. இந்த அஞ்சல் தலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் 14 நாடுகளின் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த அஞ்சல் தலை உலகக் கோப்பையில் பங்கேற்கும் 14 நாடுகளுக்கும் அனுப்பப்பட் டுள்ளது. இந்த சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல்துறை நேற்று வெளியிட்டது. சென்னை அஞ்சல் மண்டலம் சார்பாக வெளியிடப்பட்ட இந்த அஞ்சல் தலையை நியூஸிலாந்துக்கான இந்திய துணைத்தூதர் எல்.கணேஷ் பெற்றுக் கொண்டார். இதன் விலை ரூ 400 ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT