Published : 20 Feb 2015 12:11 PM
Last Updated : 20 Feb 2015 12:11 PM
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர் பி.வி.கதிரவன் கேள்விக்கும், திமுக உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் துணைக் கேள்விக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில் வருமாறு:
உசிலம்பட்டி நகருக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான கருத்துரு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.6,006 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் இப்போது வரை ரூ.11,698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அமைச்சர் பழனிசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT