Published : 20 Feb 2015 12:11 PM
Last Updated : 20 Feb 2015 12:11 PM

மத்திய அரசின் பரிசீலனையில் உசிலம்பட்டி புறவழிச்சாலை: அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர் பி.வி.கதிரவன் கேள்விக்கும், திமுக உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் துணைக் கேள்விக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில் வருமாறு:

உசிலம்பட்டி நகருக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான கருத்துரு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.6,006 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டது. இந்த ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் இப்போது வரை ரூ.11,698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அமைச்சர் பழனிசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x