Published : 24 Feb 2015 05:06 PM
Last Updated : 24 Feb 2015 05:06 PM

மனுவைப் பெறும் அலுவலர் இல்லை: நெசவாளர்கள் முற்றுகைப் போராட்டம்

ராஜபாளையத்தில் கூட்டுறவுச் சங்கத்தை முற்றுகையிட்டு நெசவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கைத்தறிகளுக்கு சேலை நெசவு செய்யும் பணியை வழங்கக் கோரி மனு தர நெசவாளர்கள் வந்தனர். மனு பெறும் தனி அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் நெசவாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெசவாளர் கூட்டுறவுசங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அலுவலக ஊழியர்கள் 4 பேரை வெளியேற்றி நெசவாளர்கள் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர்.

ஜனதா ரக சேலைகள் உற்பத்தி செய்ய வேண்டுமென 15 நாட்களாக நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்கு அரச செவி சாய்க்காததால் சங்க அலுவலகத்தை இழுத்து மூடினர். இந்நிலையில், நெசவாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x