Published : 02 Feb 2015 02:18 PM
Last Updated : 02 Feb 2015 02:18 PM

ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி பிப்ரவரி 4-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் மட்டும் இப்போராட்டம் பிப்ரவரி 7-ல் நடைபெறுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 நாட்கள் நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 31-ம் தேதி வாபஸ் பெறப்பட்டது.

இதனையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்காக 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி பிப்ரவரி 4-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x