Published : 07 Feb 2015 11:19 AM
Last Updated : 07 Feb 2015 11:19 AM

வயதை அதிகரித்து காதல் திருமணம்? - 149 பிறப்புச் சான்றிதழ்கள் மீது சந்தேகம்: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் 149 இளம்பெண்கள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரின் வயதும் 19 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், போலி யான பிறப்புச் சான்றிதழ் பெறப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுதொடர்பான விசாரணைக்கு பரேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரேலியில் கடந்த சில மாதங் களாக காதல் திருமணங்கள் அதி கரித்துள்ளன. கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற காதல் திருமணங்கள் தொடர்பாக, காவல்நிலையங்களில் 200-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.

இதில், பெரும்பாலான இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். அப்பெண்ணின் பெற்றோர், 18 வயது பூர்த்தியாகாத தங்களின் மகள் கடத்தியதாக மணமகன் வீட்டார் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, மணமகள் 18 வயது பூர்த்தியானவர், அவரின் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது என்பதை நிரூபிக்க, அவரின் பிறப்புச் சான்றிதழை அளித்துள்ளனர்.

இந்த பிறப்புச் சான்றிதழ்கள் அரசு மருத்துவமனை நிர்வாகி களுக்கு லஞ்சம் கொடுத்து வயதை அதிகரித்துக் காட்டி போலியாக பெறப்பட்டவை என பரேலி குற்ற வியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை குற்றவியல் நீதிபதி, 149 இளம்பெண்களின் பிறப்புச் சான்றிதழ்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து `தி இந்து’விடம் அரசு தரப்பு வழக்கறிஞரான கே.எம்.கான் கூறும்போது, “போலீஸாரால் மீட்கப்படும் மணமகள்கள் பிறப்பு சான்றிதழ் இல்லை என மறுத்துள் ளனர்.

எனவே, அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மருத் துவ பரிசோதனை செய்யப்பட்டனர். அவ்வாறு பெறப்பட்ட 149 சான்றிதழ் களில் ஒருவருக்கு மட்டுமே 24 வயது எனவும், மற்ற அனைவருக்கும் 19 வயதுக்கு மேல் எனவும் குறிப் பிடப்பட்டுள்ளது. இவர்கள் தோற் றத்தில் 19 வயதுக்கும் குறைவான வர்களாக இருப்பதால், நீதிபதிக்கு சந்தேகம் வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x