Published : 11 Feb 2015 11:12 AM
Last Updated : 11 Feb 2015 11:12 AM

போர்க் குற்றத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றும் கோரிக்கையை ஏற்கக் கூடாது: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

போர்க்குற்ற நடவடிக்கைகளில் இருந்து இலங்கையை காப் பாற்றுவது தொடர்பான கோரிக் கையை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால் சிறிசேனா முன்வைத் தால், அதை மத்திய அரசு ஏற்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளதாவது:

ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத்தில், இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கை மார்ச் 25-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அதி காரப்பூர்வமாக அறிவிக்கப்பட் டுள்ளது. அந்த அறிக்கை வெளியா னால், உலக அரங்கில் போர்க்குற்ற வாளியாக இலங்கை அம்பலப் பட்டு நிற்கப்போவது உறுதி.

இந்நிலையில், போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக் கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் தாக்கல் செய்யவிடாமல் முட்டுக் கட்டை போடும் செயல்களில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஈடுபட்டிருக் கிறார். இதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப் பினர்களாக உள்ள நாடுகளின் ஆதரவைத் திரட்டி வரும் அவர், அடுத்த வாரம் டெல்லி வரும்போது இந்தியாவின் ஆதரவையும் கேட்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கையில் ஆட்சி மாறி னாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டை ராஜபக்சவைவிட சிறிசேனா தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்ட அவர், ராணுவத்துக்கு காவல் துறை அதிகாரத்தையும் கூடுத லாக வழங்கியிருக்கிறார்.

இலங்கைப் பிரச்சினையை அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் கிட்டத்தட்ட கைகழுவி விட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவுக்கே உள்ளது. எனவே, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படு வதை இந்தியாதான் உறுதி செய்ய வேண்டும். விசா ரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஐ.நா. பாது காப்பு அவை மூலம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற் கான தீர்மானத் தையும் இந்தியா கொண்டு வரவேண்டும். அடுத்த வாரம் இந்தியா வரும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா போர்க்குற்ற நடவடிக்கைகளில் இருந்து தமது நாட்டை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத் தால் அதை இந்திய அரசு ஏற்கக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x