Published : 21 Feb 2015 10:46 AM
Last Updated : 21 Feb 2015 10:46 AM

நில உடைமை பதிவேடுகளை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழகத்தில் நில உடைமை பதிவேடுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள பட்டா விவரங்களில் கிராமப்புற மற்றும் கணினி பதிவுகளில் சுமார் 30 சதவீத பட்டாக்கள் 30 ஆண்டு காலமாக இறந்தவர்களின் பெயர்களிலேயே உள்ளன. இதுமட்டுமன்றி 50 சதவீத பட்டாக்கள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. நில உடைமை பதிவேடுகளை வருவாய்த்துறை முறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு பட்டா பதிவுச் சட்டத்தில் உள்ளது போல் ஒவ்வொரு விவசாயிக்கும் பட்டா பாஸ் புத்தகம் வழங்க வேண்டும். வங்கிகள் கடன் பெறவும், நிலங்களை போலியாக கையகப் படுத்துவதை தடுக்கவும் அந்த புத்தகங்கள் பெரிதும் உதவும்.

நில அளவீடு மற்றும் பட்டா மாற்றப் பணி களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான விவரங்களை வருவாய்த் துறைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். இந்த பணிகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திர பதிவுத் துறையும், வரு வாய்த் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு கால தாமதமின்றி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x