Published : 17 Jan 2015 11:45 AM
Last Updated : 17 Jan 2015 11:45 AM

பள்ளிகளுக்கு இடையே அறிவியல் போட்டி

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி போட்டி சென்னை அருகேயுள்ள ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரியில் ஜனவரி 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். இதில், இயற்பியல், கணிதம், பொறியியல் தொடர்பான கண்காட்சிகளை இடம்பெறச்செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க பதிவுக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள் scienceexhibition@ritchennai.edu.in என்ற மின்னஞ்சலில் பதிவுசெய்துகொள்ளலாம் என்று ராஜலட்சுமி கல்வி குழுமங்களின் தலைவர் தங்கம் மேகநாதன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x