Published : 31 Jan 2015 01:04 PM
Last Updated : 31 Jan 2015 01:04 PM

எழும்பூரில் வழக்கறிஞர் ஸ்டாலின் படுகொலை

சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு வெளியே நள்ளிரவில் வழக்கறிஞர் ஸ்டாலின் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. படுகாயம் அடைந்த ஸ்டாலின் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நீதிமன்ற வக்கீல் சங்கத் தலைவருக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. நேற்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு வழக்கறிஞர் சந்தன் பாபு தலைவராகத் தேர்வானார்.

சந்தன் பாபு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி நள்ளிரவில் கொண்டாட்டத்தில் திளைத்தனர். வழக்கறிஞர் ஸ்டாலின் வில்லிவாக்கத்தைச் சார்ந்தவர். இவர் சந்தன் பாபு ஆதரவாளர். இவரும் நள்ளிரவில் அந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றார்.

அப்போது சந்தன் பாபுவை எதிர்த்து தோற்ற தரப்பு பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் வழக்கறிஞர் ஸ்டாலின் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து, சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஸ்டாலின் உயிரிழந்தார்.

எழும்பூர் கோர்ட் வெளியே இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சந்தன் பாபு ஆதரவாளர் ஸ்டாலின் மீது வழக்கறிஞர் தேர்தலில் தோற்ற தரப்பு தாக்குதல் நடத்தியது என புகார் தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x