Published : 21 Jan 2015 04:54 PM
Last Updated : 21 Jan 2015 04:54 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு

தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதிமுகவுக்கு ஆதரவு தருகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான ஸ்ரீங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மாநிலத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக வேட்பாளராக எஸ்.வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 27-ம் தேதியுடன் முடிகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பாமகவும், மதிமுகவும் அறிவித்துவிட்டன. எந்த கட்சி வேட்பாளரையும் ஆதரிக்கப்போவதுமில்லை என இரு கட்சிகளும் உறுதியாகக் கூறிவிட்டன.

இந்நிலையில், ''தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதிமுகவுக்கு ஆதரவு தருகிறது'' என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x