Published : 02 Jan 2015 10:37 AM
Last Updated : 02 Jan 2015 10:37 AM

மிலாடி நபி: ஜன.4-ல் டாஸ்மாக் மூடல்

சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 4-ம் தேதி மூடப்பட்டு இருக்கும். இந்த நடவடிக்கை தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ் எடுக்கப்படுகிறது.

அன்றைய தினம் அரசு மதுபான கடைகள் அனைத்தையும் கண்டிப்பாக மூடவேண்டும். இதை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x