Published : 20 Jan 2015 03:38 PM
Last Updated : 20 Jan 2015 03:38 PM

மெரினா கடற்கரையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படையினர், மாணவ மாணவியர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஒத்திகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாரம்பரிய நடனங்கள், கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கலங்கரை விளக்கத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு ஒத்திகை விவேகானந்தர் இல்லம் வரை நடைபெற்றது.

ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x