Published : 21 Jan 2015 09:36 AM
Last Updated : 21 Jan 2015 09:36 AM
குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் 22, 24, 26 ஆகிய 3 நாட்கள் காலையில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: குடியரசு தின விழா 26-ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு கடற் கரை சாலையில் ஒத்திகை நிகழ்ச் சிகள் நடக்கிறது. இதற்காக 22, 24 ஆகிய தேதிகளிலும் குடி யரசு தின விழா நடக்கும் 26-ம் தேதியும் மெரினா கடற்கரை சாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த 3 நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படும். காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை எந்த வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படாது.
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலை வழியாக பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை வழியாக திருப்பி விடப்படும். மாநகர பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை - கச்சேரி சாலை சந்திப்பில் கச்சேரி சாலை நோக்கி திருப்பிவிடப்படும். 27-டி, 21-ஜி, 12-ஜி, 45-பி ஆகிய பேருந்துகளின் வழித்தடங்களும் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் மட்டும் இந்த 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றன.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை யில் இருந்து காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங் களும் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும். டாக் டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.
டாக்டர் பெசன்ட் சாலையி லிருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள், பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப் படும். பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங் கள், பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத் தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும். பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே உயர் நீதிமன்ற சாலையில் திருப்பி விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT