Published : 20 Jan 2015 10:49 AM
Last Updated : 20 Jan 2015 10:49 AM

அதிமுகவுக்கு குடியரசுக் கட்சி ஆதரவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக இந்திய குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான செ.கு. தமிழரசன் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் நலத் திட்டங்கள், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உயர்வுக்கு ஊன்றுகோலாக விளங்குகிறது.

இந்தப் பெருமையை பொறுத்துக்கொள்ள இயலாத சில மக்கள் விரோத சக்திகள் மற்றும் மக்கள் அரங்கில் புறக்கணிக்கப்பட்ட சக்திகள், குறுக்கு வழிகளில் தடை ஏற்படுத்த முயற்சிக் கின்றனர்.

எனவே, இந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதியின் வெற்றிக்கு இந்திய குடியரசுக் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்வர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய அமைப்புகளும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x