Published : 27 Jan 2015 03:28 PM
Last Updated : 27 Jan 2015 03:28 PM
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் ஜன.19-ம் தேதி தொடங்கியது.
தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ஆனந்த், பாஜக சார்பில் சுப்பிரமணியம், ஆம் ஆத்மி சார்பில் ரவி, டிராபிக் ராமசாமி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 42 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாளான இன்று மட்டும் 25 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாமக, மதிமுக, தமாகா ஆகியவை போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுக்கள் பரிசீலனை ஜன.28-ம் தேதி நடைபெறுகிறது. ஜன.30-ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
அன்றைய தினம் போட்டி யிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு பிப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு என தொகுதி முழுவதும் 322 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப் பட்டு, அங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குகள் எண்ணிக்கை பிப்.16-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT