Published : 05 Jan 2015 10:12 AM
Last Updated : 05 Jan 2015 10:12 AM

சென்னை நெல்லை சிறப்பு ரயில் முன்பதிவு விறுவிறுப்பு

பொங்கலையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னை நெல்லை, சென்னை - நாகர்கோவில் இடையே 22 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 18 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வரும் 9, 10ம் தேதிகளில் நெல்லை செல்லும் விரைவு சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.

இதையடுத்து, அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பிரீமியம் விரைவு ரயில்களுக்கான முன்பதிவு கணிசமான இடங்கள் காலியாகவுள்ளது. இதேபோல், மற்ற நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 50 சதவீத அளவுக்கு டிக்கெட் காலியாக உள்ளன.

இதற்கிடையே, சென்னை எழும்பூரில் இருந்து 23-ம் தேதி நெல்லை செல்லும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலுக்கு 8-ம் தேதியும் எழும்பூரில் இருந்து 24-ம் தேதி இரவு நெல்லை புறப்படும் பிரீமியம் சிறப்பு விரைவு ரயிலுக்கு 9-ம் தேதியும் நெல்லையில் இருந்து 26-ம் தேதி மாலை சென்னை புறப்படும் சிறப்பு விரைவு ரயிலுக்கு 11-ம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x