Published : 07 Jan 2015 09:57 AM
Last Updated : 07 Jan 2015 09:57 AM
சென்னையில் வன்முறைகள் நடக்கும் 6 கல்லூரிகளை கண் காணிக்க குழு அமைக்கப்பட்டுள் ளது. மாணவர்களை நல்வழிப் படுத்த இந்தக் குழுவின் மூலமாக அவர்களை செஞ்சிலுவை சங்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கூறியுள்ளார்.
செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றத்துக்கும் செயல்பாட்டுக் கும் ஆதாரமாய் விளங்கும் ஜெனிவா மாநாட்டின் 65-வது ஆண்டு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆர்.தாண்டவன் பேசியதாவது:
பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நியூ கல்லூரி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி, தியாகராயக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட செஞ்சிலுவை சங்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. உள்ளிட்டவற்றில் அவர்களை இணைக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் சமூகத்துக்கு தொண்டாற்ற முடியும்.
இதற்காக நந்தனம் கல்லூரி முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் கள், கல்லூரி கல்வி இயக்குநர், காவல்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் கொண்ட குழு இது குறித்து மேலும் பல முடிவுகளை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய செஞ்சிலுவை சங்கத் தின் தமிழ்நாடு பிரிவின் ஆலோ சகர் பேராசிரியர் எ.காதர் பாஷா, “செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பேரிடர் காலங்களில் உதவி வேண்டுவோருக்கும் சேவையாற்ற வேண்டும். அதற்கு மாணவர் களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி தர வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் இந்திய செஞ்சி லுவை சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் டாக்டர் ஹரீஷ் எல்.மேத்தா, சென்னைப் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பாக தொண்டாற்றிய கல்லூரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT