Published : 05 Jan 2015 02:26 PM
Last Updated : 05 Jan 2015 02:26 PM
காரைக்காலைச் சேர்ந்த 15 மீனவர்களையும் ஜனவரி 19 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 9-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை 2 விசைப்படகுகளுடனும், காரைக்கால் கோட்டுச்சேரி, காசாகுடிமேடு பகுதிகளைச் சேர்ந்த 29 மீனவர்களை 3 விசைப் படகுகளுடன் என மொத்தம் 43 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
43 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் என மொத்தம் 28 மீனவர்களை மட்டும் விடுதலை செய்தும், எஞ்சிய 15 மீனவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று காரைக்கால் மீனவர்கள் 15 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த 15 மீனவர்களையும் ஜனவரி 19 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT