Published : 28 Jan 2015 10:55 AM
Last Updated : 28 Jan 2015 10:55 AM

அண்ணாவின் 46-வது நினைவு நாள்: பிப்.3-ல் சென்னையில் திமுக அமைதி பேரணி

சென்னை மாவட்ட திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ள தாவது:

தமிழ் மொழியின் உயர்வுக்காக வும் தமிழர்களின் மேன்மைக்காக வும் நாளெல்லாம் உழைத்தவர் அண்ணா. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை உலகுக்கு தந்த பெருமகனார். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றிய அண்ணாவின் 46-வது நினைவு நாள், பிப்ரவரி 3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பேரணி முடிவடையும்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x