Published : 06 Dec 2014 10:17 AM
Last Updated : 06 Dec 2014 10:17 AM
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானம், ரயில், பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 4 கூடுதல் கமிஷனர்கள், 4 இணை கமிஷனர் கள், 19 துணை கமிஷனர்கள் தலை மையில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை, திருச்சி, கன்னியா குமரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்குவரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர். பயணிகளின் உடைமை கள் நவீன கருவிகள் மூலமாக சோதனை செய்யப் படுகிறது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபட்டு வருகின்ற னர்.
இதேபோல விமான நிலையங் கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT