Published : 01 Dec 2014 01:22 PM
Last Updated : 01 Dec 2014 01:22 PM
நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பில்லை என்று, மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைவேலு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவுக்குட்பட்ட பாக்கனா, ஓர்கடவு ஆகிய பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென இறந்தன. இதனால், மக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட் டுள்ளது.
இதைத் தொடர்ந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கோழி களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகு தியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 கோழிகள் உயிரிழந்துள்ளன.
இதனிடையே பாக்கனா, ஓர்கடவு பகுதிகளை மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைவேலு, கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தைவேலு கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பில்லை. அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT