Published : 26 Apr 2014 11:03 AM
Last Updated : 26 Apr 2014 11:03 AM

சென்னையில் ரசாயன குடோனில் தீ விபத்து

சென்னை பெருங்குடியில் உள்ள ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயன திரவம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

பெருங்குடி நேரு நகர் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன குடோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் 45 பேரல்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த எத்தில் அசிடேட் ரசாயன திரவம் முற்றிலுமாக எரிந்தது.

மாலை 6.27 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 13 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 70 தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x