Published : 06 Dec 2014 11:36 AM
Last Updated : 06 Dec 2014 11:36 AM
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆதார் நிரந்தர மையங்களில் பொது மக்களுக்கு உரிய தகவல்களைத் தெரிவிக்க யாரும் இருப்பதில்லை என்று பொதுமக்கள் `தி இந்து' உங்கள் குரலில் புகார் தெரிவித் துள்ளனர்.
இது குறித்து ஷெனாய் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது: தற்போது சமையல் கேஸ் சிலிண்டரை மானிய விலையில் பெற, ஆதார் எண் கேட்கப்படுகிறது. மேலும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அரசு விரைவில் அறிவிக்கும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் சென்னை மாநகரம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து ஷெனாய் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள ஆதார் நிரந்தர மையத்தில், ஆதார் எண் பெறுவது குறித்து தகவல் பெறச் சென்றபோது, அந்த மையத்தில் ஆதார் தொடர்பாக பதில் அளிக்க யாரும் இல்லை. இதனால் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இவ்வாறு புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் ஒவ்வொரு மண்டலத்திலும் 3 இடங்கள் என மொத்தம் 60 இடங் களில் ஆதார் நிரந்தர மையங் களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மண்டல அலுவலகங் களிலும் ஆதார் எண் வழங்குவதற் கான பொதுமக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டம் மக்கள்தொகை கணக் கெடுப்பு துறை மூலமாக, பெங்களூ ரில் உள்ள மத்திய அரசின் பி.இ.எல். நிறுவனம் ஆதார் விவரங்களை பதிவு செய்து, ஆதார் எண் மற்றும் அட்டையை வழங்கி வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் மண்டல அலுவலகங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் தொடங்கப்பட்ட ஆதார் நிரந்த மையங்கள் சிலவற்றில் போதிய ஆட்களை பி.இ.எல் நிறுவனம் அனுப்பவில்லை. இதனால் பிரச்சினை எழுகிறது. ஆதார் விவகாரத்தில் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நாங்களே கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களை தேர்வு செய்து, பயிற்சியளித்து வருகிறோம். விரைவில் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT