Published : 28 Dec 2014 10:17 AM
Last Updated : 28 Dec 2014 10:17 AM

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், இலங்கையின் மத்திய பகுதியில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும். உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x