Published : 12 Dec 2014 09:59 AM
Last Updated : 12 Dec 2014 09:59 AM

மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைந்து, உள் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பெய்தது. மேலும் குன்னூரில் 10 செ.மீ., அவிநாசியில் 7 செ.மீ., கோத்தகிரி, பாளை யங்கோட்டை, மணிமுத்தாறு, பொன்னேரி ஆகிய இடங்களில் 6 செ.மீ., கேளம்பாக்கம், ஊத்தங்கரை, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ., தென்காசி, மேட்டூர், போடிநாயக்கனூர், வேடசந்தூர், சாத்தனூர், கேத்தி, சிவகிரி, செங்குன்றம், ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x