Published : 06 Dec 2014 02:15 PM
Last Updated : 06 Dec 2014 02:15 PM
பெங்களூரில் நடந்த தென் மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பள்ளி மாணவி வைஷாலி பங்கேற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனை தொடர்ந்து, கடந்த மாதம் 23 முதல் 26-ம் தேதி வரையில் அரியானா மாநிலம், சோனிபட் எனுமிடத்தில் தேசிய அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, வளைகுடா நாடுகள் என 7 மண்டலங்களைச் சேர்ந்த 425 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் 19 வயதுக்கு உள்பட்ட 50 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில் பங்கேற்ற மாணவி வைஷாலி மூன்றாமிடம் (வெண்கலப் பதக்கம்) பெற்றார். பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவியை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT