Published : 08 Dec 2014 11:00 AM
Last Updated : 08 Dec 2014 11:00 AM

ஒகேனக்கல்லில் ஒரு அடியைகூட விட்டுத்தர முடியாது: அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஒகேனக்கல்லில் ஒரு அடியைக்கூட விட்டுத்தர முடியாது என தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தேசிய அளவிலான இறகுப் பந்து இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் நேற்று திருப்பூர் வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒகேனக்கல் கர்நாடகத்துக்குச் சொந்தம் என அந்த மாநில முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கர்நாடக மாநில முதல்வராக, மிகவும் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர். இரு மாநில உறவுகளில் இணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளை கொண்டுவரக் கூடாது. இதைக் கண்டிக்கிறோம். கர்நாடக முதல்வர் மட்டுமல்ல; அந்த மாநிலத்தின் மற்ற அரசியல்வாதிகளும் இப்பிரச்சினையை எழுப்பக் கூடாது. இதனால் தேவையில்லாத பதற்றம் ஏற்படும். ஏற்கெனவே காவிரி பிரச்சினை யால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ஒகேனக்கல், தமிழகத்துக்குச் சொந்தமானது என ஏற்கெனவே முடிவானது. இதில் மறு ஆய்வுக்கு வாய்ப்பு இல்லை. ஒகேனக்கல் என்னுடைய தொகுதிக்குள் வருகிறது. அங்கு, ஒரு அடியைக்கூட விட்டுத்தர முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x