Published : 06 Dec 2014 10:20 AM
Last Updated : 06 Dec 2014 10:20 AM
சென்னையின் மோசமாக உள்ள சாலைகள் சீர்படுத்த வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
சென்னையில் சாலைகள் மோசமாக உள்ள இடங்களைத் தேர்வு செய்து, ஆம் ஆத்மி கட்சியினர் கடந்த ஒரு வாரமாக கையெழுத்து இயக்கம் நடத்தி வந்தனர். போரூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, இந்திரா நகர், பெரம்பூர், அண்ணா நகர், கே.கே.நகர், சூளைமேடு, பாரிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டு கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டன.
அவை மனுவுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ‘சென்னை சாலைகளின் மோசமான நிலைக்கு ஊழலே காரணம் என்றும் சாலை கான்ட்ராக்டர்களுக்கு அபராதம் விதித்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT