Published : 02 Dec 2014 10:04 AM
Last Updated : 02 Dec 2014 10:04 AM
கல்லூரி மாணவர்கள் நடத்திய பைக் ரேஸால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
கிண்டி ஜிஎஸ்டி சாலையில் இருந்து தாம்பரத்துக்கு நேற்று முன்தினம் மாலை கல்லூரி மாணவர்கள் 6 பேர் 3 பைக்கு களில் பந்தயம் நடத்தினர். மாணவர்கள் சென்ற பைக்கில் ஒன்று, திரிசூலம் சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதியது.
தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மீது மோதிய பைக்கில் வந்த மாணவர்களும் காயமடைந்தனர். தகவல றிந்து விரைந்து வந்த பரங்கிமலை போக்கு வரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், காயமடைந்த 3 பேரையும் மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் கடுகாயம்
படுகாயமடைந்த பெண், விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற் றும் முத்துலட்சுமி (31) என்பது தெரிந்தது. பைக்கில் இருந்து விழுந்த பிரபுதாஸ் (20), மெர்வீஸ்(19) இருவரும் குரோம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கின்றனர்.
மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அவர்களை கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT