Published : 26 Dec 2014 03:26 PM
Last Updated : 26 Dec 2014 03:26 PM

பாலியல் வழக்கில் சன் நெட்வொர்க் சி.ஓ.ஓ. கைது

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.-வாக பணியாற்றி வரும் பிரவீண் சதங்கதோடி இன்று சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சூர்யா தொலைக்காட்சி நிர்வாகத்தையும் கவனித்து வரும் பிரவீணுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பெண் ஊழியரை 5 மாதங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரவீண் இன்று அவரது அண்ணா நகர் இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

பெண் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொச்சிக்கு அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று அந்தப் பெண், சென்னை நகர காவல்துறையிடம் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

மேலும், அவருக்குச் சேர வேண்டிய சம்பளம், பி.எஃப். என சுமார் ரூ.35 லட்சத்தை கொடுக்காமல் பிரவீண் நிறுத்தி வைத்ததாகவும் புகார் எழுப்பியுள்ளார் அந்த பெண் ஊழியர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரவீண விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x