Published : 08 Dec 2014 09:57 AM
Last Updated : 08 Dec 2014 09:57 AM

மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண பாஜக முயற்சி எடுத்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பாஜக தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ‘சென்டர் ஃபார் ஏசியன் ஸ்டடீஸ்’ மற்றும் பாஜக சார்பில் ‘ரே ஃபார் ஹோப்’ என்னும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில் இலங்கை எம்.பி, சுமந்திரன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் விளக்கக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த கருத்தரங்கு குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை தமிழர்கள் அரசியல் அதிகாரத்துடன் வாழவும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் பாஜக தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இந்த பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்வதைக் காட்டிலும், இவற்றை முறையாக அணுகி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக ‘ரே ஃபார் ஹோப்’ கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

இந்த கருத்தரங்கில் மீனவர்கள் மற்றும் இலங்கையை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று இலங்கை பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பாக நான்கு அமர்வுகளில் பேசினர். பொது மக்கள் மற்றும் பிரச்சினையுடன் தொடர்புடையவர்கள் கட்சி சார்பற்று தங்களது கருத்துகளை சொல்ல வேண்டுமென்றே இக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.இந்தக் கருத்தரங்கின் தீர்மானங் கள் தயார் செய்யப்பட்டு அவை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அளிக்கப்படும்.

மீனவர்களின் வசதிக்காக ஆழ்கடல் மீன்பிடிப் புக்கான உபகரணங்களையும் பயிற்சி களையும் வழங்குவது, ஆழ் கடலில் செல்போன் கோபுரங்கள் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளப்போவதாக பாஜக அரசு ஏற்கெனவே அறிவித்துள் ளது. இந்த நிலையில் மீனவர் பிரச்சினையை கையாளும் விஷயத்தில் செயலற்றிருந்த காங்கிரஸ் அரசை பாஜகவோடு ஒப்பிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x