Published : 24 Dec 2014 10:31 AM
Last Updated : 24 Dec 2014 10:31 AM

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தி.நகர் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஷாகிஸ். இவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் குடும்பத் தலைவி ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் தினமும் வேலைக்குச் செல்லும் போது, தனது 3 வயது மகளை கவனித்துக் கொள்ளும்படி கூறி, ஷாகிஸின் கடையில் விட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2013 ஜன.16-ம் தேதி வேலை முடித்து விட்டு வந்தபோது தனது மகளுக்கு உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல்ரீதியில் துன்புறுத் தப்பட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஷாகிஸ் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்த சிறுவன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய் தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சத்திஷ், ஷாகிஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x