Published : 09 Dec 2014 12:27 PM
Last Updated : 09 Dec 2014 12:27 PM

சென்னையில் மீனவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 குதிரைத் திறன் கொண்ட படகுகளை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில், நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் சார்பில், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சங்கத்தின் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் நாஞ்சில் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கள் பேசியதாவது: தமிழ்நாடு கடல்மீன் ஒழுங்குமுறை சட்டம் 1983 மற்றும் 2011ன்படி, மூன்று கடல் மைல்களுக்குள் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மூன்று கடல் மைல் பகுதியினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, கட்டுமரம் மற்றும்

பைபர் படகில் மட்டும் மீன் பிடிக்க அனுமதி அளித்து, மீனவர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் உள்ளது போல் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு, 250 குதிரைத் திறன் கொண்ட படகுகளை அனுமதிக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x