Published : 27 Dec 2014 10:38 AM
Last Updated : 27 Dec 2014 10:38 AM

பாஜக கூட்டணி வலுவாக உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, நாகர் கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் ரத்ததான முகாம் நடை பெற்றது. இதை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசும்போது, ‘வாஜ் பாய்க்கு சரியான நேரத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்காக பல்வேறு நல்ல திட் டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பெருமை அவருக்கு உண்டு.

இலங்கை தமிழர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் மத்திய பாஜக அரசு நிச்சயம் செய்து கொடுக்கும். தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. இக்கூட்டணிக்கு வருபவர்கள் நிலைத்து இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x